Thursday, May 17, 2012

மானங்கெட்ட முன்னோர்கள்



'அடேய் மானங்கெட்ட முன்னோர்களா எங்கடா இருக்கீங்க, ஏண்டா இப்படி பூமிய நாறடிச்சு வச்சிருக்கீங்க , நீங்க நாசமா போயிருவீங்கடா, நாசமா போயிருவீங்க...' என்று விவேக் பாணியில் வரும்கால சந்ததியினர் நம்மை திட்டப்போவது வெகு நிச்சயம்.

ஒருபுறம் பெருகிவரும் உற்பத்தி, உயர்ந்து வரும் கட்டிடங்கள், மறுபுறம் அனைத்தும் சந்தை தான் என்கிற போக்கு, இவையனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மாணங்கெட்ட முன்னோர்களாக ஆக்கி வருகின்றன என்பதில் எள்ளலவும் ஐயமில்லை.

இப்போதிருக்கும் அறிவியல் நம்முடைய இப்போதைக்கு இருக்கிற அறிவிற்கு முன்னேரிய அறிவியல் போல தோன்றலாம். ஆனால் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு அது அவ்வாறு இருக்காது. 'வெரி அட்வான்ஸ்ட் டெக்னாலஜி' என்று இப்போது நாம் மெச்சும் தொழில் நுட்பம் நமது சந்ததியினருக்கு வெறும் கைப்புள்ள அறிவியல் போலத்தான் முட்டாள்தனமாக தோன்றும். இருப்பினும் இந்த 'அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்களை' பயன்படுத்தி நாம் விளைவிக்கின்ற சேதங்கள் எப்போதும் திரும்ப பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்காது. தொலைநோக்கு இல்லாமல் நாம் வீண்டிக்கின்ற வளங்கள் விளைவிக்கின்ற சேதம் ஒவ்வொன்றிற்கும் செயலுக்கும் நம்முடைய சந்ததியினர் அழுது புலம்ப வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு கட்டிடத்தை உயர்த்தெழுப்பவும் எத்துனை எத்துனை இயற்கை வளங்கள் தேவைப்படுகின்றன. ஜல்லி, சிமென்ட், மணல், இரும்பு, நீர், இவற்றில் ஒன்றையேனும் நம்மால் திரும்பவும் உருவாக்க முடியுமா. பாறையை உடைத்து ஜல்லியாக்கலாம், திரும்பவும் ஜல்லியில் இருந்து அந்தப்பாறைகளை நம்மால் உருவாக்க முடியுமா? ஜல்லியை நெரித்து அரைத்து சிமெண்ட் ஆக்கலாம், இடிந்து போன கட்டிடத்தில் இருக்கும் சிமெண்ட்டை மீண்டும் பாறையாக்க முடியுமா? கலிமண்ணை சுட்டு செங்கல், பீங்கான், டைல்ஸ் போண்றவை செய்யலாம், உடைந்து போன பீங்கானில் இருந்து மீண்டும் கலிமண்ணை கொண்டுவர முடியுமா? நாம் கட்டும் கட்டிடங்களின் ஆயுள் சில பல ஆண்டுகளே. இவற்றுக்காக நாம் அழிக்கும் இயற்கை வளங்களின் ஆயுட்காலம் எத்துனை கோடி ஆண்டுகளாக இருந்திருக்கும். நாம் அழிக்காமல் விட்டால் இன்னும் எத்துனை கோடி ஆண்டுகள் இருக்கும். இதுபோல கணிப்பொறி, செல்பேசி, வண்டி, வாகனம், எரிபொருள், ப்ளாஸ்டிக், என்று கட்டுப்பாடற்று சந்தையை மட்டுமே குறியாகக்கொண்டு தயாராகும் ஒவ்வொரு பொருளும் இயற்கை வளங்களை அழித்துத்தான் உருவாகின்றன. இவை விளைவிக்கின்ற விளைவிக்கப் போககின்ற சேதங்கள் பற்றி யாருக்கும் எண்ணிப்பார்க்க நேரமில்லை.

அனுக்களை பிளந்தால் ஆற்றல் வெளிப்படும். ஆனால் உடைந்துபோன அந்த அணுக்கள் அதற்கு பின் என்ன ஆகும்? அது ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போவது மட்டுமில்லை, உடைந்து போன யுரேனியத்தையும், தோரியத்தையும் திரும்பவும் உருவாக்க முடியாது என்பது மட்டுமில்லை, அந்த உடைந்து போன அனுக்களில் இருந்து மனித உடலையும், மரம் செடி ஆகியவற்றின் செல்களையும் கிழித்தெடுக்க கூடிய கதிர்வீச்சு அதற்குப் பின் எப்போதும் எத்துனை ஆயிரம் ஆண்டுகள் ஆனபோதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த கழிவுகளை காலம்பூராவும் நம் வருங்கால சந்ததியினர்களும் அவர்களின் சந்ததியினர்களும் பிசாசை அடைத்த பெட்டியை போல அயிரம் அயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாதுகாத்து வரவேண்டும். அனு உலை பாதுக்கப்பின்மை, தொழில்நுட்பத்தில் குறை, உயிர் அபாயம், இதன் பின்னால் இருக்கும் ஊழல் இவை அனைத்தையும் மீறி நம் வருங்கால சந்ததியினருக்கு எந்த உபயோகமுமில்லாத நாசம் விளைவிக்கும் இந்த அணுக்கழிவுகளை பாதுகாக்கும் பொருப்பை விட்டு செல்வது, எப்போதும் நீங்காது ஒட்டிக்கொண்டே இருக்கும் பிய்யை அவர்களின் வாயில் அப்பிவிட்டுசெல்வது போன்றது.

மின்சாரமில்லை அனு உலையை தொடங்குங்கள் என்பதும், பெண் கிடைக்கவில்லை அதனால் தங்கையை அல்லது தாயை கட்டிவையுங்கள் என்பதும் ஒன்றுதான். இந்த உண்மை எத்துனை பேருக்கு விளங்கும் என்று தெரியவில்லை.

இவ்வாறே கட்டுப்பாடற்று தொலைநொக்கில்லாமல் வீண்டிக்கப்படும் இந்த இயற்கை வளங்கள் இன்னும் எத்துனை காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியும். அதற்க்குப்பின் நாமோ நமது சந்ததியினரோ என்ன செய்யமுடியும். அறிவியல் முன்னேற்றமோ பொருளாதார முன்னேற்றமோ வேண்டாமென்பதல்ல எனது வாதம். ஆனால் அறிவியல் முன்னேற்றமும் அதனொட்டி வருகின்ற பொருளாதார முன்னேற்றமும் தொலை நோக்கோடு ஆக்கபூர்வமாகவும் எல்லோருக்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். சந்தை இலாபத்தையும் தற்காலிக சுயநலத்தையும் மட்டுமே குறியாக கொண்டு இருக்க கூடாது. அதுதான் உண்மையில் அறிவு உண்மையில் அறிவியல் உண்மையான முன்னேற்றம்.